இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் சனி தரும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
*காப்பு*
தேவரெண் டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை சொல்லக்
காரணிந்த யானைமுகன் காப்பு.
*நூல்*
ஆதிவேதாந்த முதலரிய ஞான
வைந்தெழுத்தி னுட்பொருளை அயன்மால் தேடும்
சோதி சிற்றம்ப லத்தி லாடிநின்ற
சுட ரொளியை நீபிடித்த தோஷத்தாலே
பாதி மதிசடைக் கணிய வரவம் பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்
சாதி யில்லா வேடனெச்சில் தின்னவைத்தாய்
சனியனே காகமேறுந் தம்பிரானே
வேலவனை வேங்கைமர மாக்கிவைத்தாய்
விறகுகட்டுச் சொக்கர்தமை விற்கவைத்தாய்
மாலவனை யுரலோடு கட்டுவித்தாய்
வள்ளிதனைக் குறவறது வனத்தில் வைத்தாய்
காலனைமார்க் கண்டணுக்கா வரனுதைத்த
காரணமு நீபிடித்த கருமத்தாலே
சாலவுனையான் றொழுதே னெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
மஞ்சுதவ ளயோத்தியில்வாழ் தசரதன்றன்
மக்களையும் வனவாச மாக்கிவைத்தாய்
பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடு பாடைவர் படச்செய் வித்தாய்
எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டை விற்றே
யிழிகுலத்தி லடிமையுற விசையவைத்தாய்
தஞ்சமென வுனைப் பணிந்தே னெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
அண்டமாயிரத் தெட்டுமரசு செய்த
வடல்சூர பதுமனைய மடக்கி வைத்தாய்
மண்டலத்தை யாண்டநளச் சக்ரவர்த்தி
மனைவியொடு வனமதனி லலையச் செய்தாய்
விண்டலத்தை பானுகோ பன்தன்னாலே
வெந்தணலாக்கிச் சூரரை வெருவச் செய்தாய்
தெண்டனிட்டே னெந்நாளு மெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே.
அண்டர்கோன் மேனியிற் கண்ணாக்கு வித்தாய்
அயன்சிரத்தை வயிரவனா லறுக்க செய்தாய்
திண்டிறகொள் கெளதமனா லகலிகைதான்
சிலையாகும்படி சாப முறவே செய்தாய்
தண்டரள நகையிரவி மாரன் தன்னைச்
சங்கரனார் நுதல்தவிழியிற் றணல்செய் வித்தாய்
சண்டமிலா துனைத்தொழுதே னெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
பாருலவு பரிதியைப்பல் லுதிரவைத்தாய்
பஞ்சவர்க்குக் கண்ணனை தூதாக்கி வைத்தாய்
தாருலவு வாலி சுக்ரீவன் றம்மைத்
தாரையினால் தீராத சமர் செய்வித்தாய்
சூரனெனு மிலங்கைரா வணன்றன் தங்கை
சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்
தாரணியு மணிமார்பாவெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
சுக்ரன்றன் கண்ணிழந்தான் னிலங்கையாண்டு
துலங்கும் ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்
மிக்கபுக ழிரணியென்றான் வீறழிந்தான்
விளங்குதிரி புராதிகளும் வெந்துமாண்டார்
சக்கரத்தா லுடலறுந்தான் சலந்தரன்றான்
தாருகாசுரனு மேசமரில் மாண்டான்
தக்கன்மிகச் சிரமழிந்தா நிந்தோழத்தால்
சனியனே காகமேறுந் தம்பிரானே.
அந்தமுள வைங்கரன் கொம் பறவேசெய்தாய்
அறுமுனிவர் மனைவிகள்கற் பழியச்செய்தாய்
சந்திரன்றன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சைதா னெடுக்கச் செய்தாய்
தந்தமுகச் சூரனுயிர் தளரச் செய்தாய்
சாரங்க தரன் கரத்தை தறிக்கச்செய்தாய்
சந்ததமு முனைப்பணிந்தே னெனைத் தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
சீதைதனை யிராவணறாற் சிறைசெய்வித்தாய்
தேவர்களைச் சூரனாற் சிறைசெய்வித்தாய்
மாதுதுரோ பதைதுகிலை வாங்கு வித்தாய்
மகேச்சுரனை யுமைபிரியும் வகை செய்வித்தாய்
போதிலயன் தாளி ற்றளைப் பூட்டிவித்தாய்
பொதிகையினிலகத்தியனை பொருந்தச் செய்தாய்
தாதுசேர் மலர்மார்பா வெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே.
அப்பர்தமை கருங்கல் லோடலையிற் சேர்த்தாய்
யரனடியில் முயலகனை அடங்கச்செய்தாய்
செப்புமா ணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
திருமாலை மச்சவுரு வெடுக்கச்செய்தாய்
ஒப்பிலநு மான்வாலி லொளிர் தீயிட்டாய்
ஒலிகடலி னஞ்சையர ணுண்ண வைத்தாய்
தப்பிலா துனைத் தொழுதே னெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
நீரினையுண்ட டெழுமேக வண்ணா போற்றி
நெடுந்தவத்தில் உறுகமலக் கண்ணா போற்றி
சூரியன்றன் றவத்தில்வந்த பாலா போற்றி
தூயநவக் கிரகத்துள் மேலா போற்றி
காரியெனும் பேர்கொளும் காரா போற்றி
காசினியில் கீர்த்திபெற்ற தீரா போற்றி
மூரிகொளு நோய்முகவா முடவா போற்றி
முதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி!!!
No comments:
Post a Comment