Friday, 26 August 2011

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய!





நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி!
சிவ ஓம் நமசிவாய!
தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே
சூல நாதனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய

ஒளியே நமசிவாயம்
உணர்வே நமசிவாயம்
வெளியே நமசிவாயம்
விசையே நமசிவாயம்

மோன வடிவாகி மோகனம் காட்டும்
மூர்த்தி லிங்கனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
ஞானம் வழங்கி நற்கதி அருளும்
நந்தி வாகனா போற்றி!
ஹர ஓம் நமசிவாய

ராகம் நமசிவாயம்
ரகசியம் நமசிவாயம்
லோகம் நமசிவாயம்
யாகம் நமசிவாயம்

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும்
அருணாச்சலனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
நர்த்தனம் தாண்டவம் நாடகமாடும்
நாக நாதனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய

அறிவும் நமசிவாயம்
அசைவும் நமசிவாயம்
இலையும் நமசிவாயம்
நிறைவும் நமசிவாயம்

ரமணமுனிக்கு ரகசியம் சொன்ன
ராஜலிங்கனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
இமையோர் தலைவன் பதவியும்
வழங்கும் ஈச மகேசா போற்றி!
ஹர ஓம் நமசிவாய

கோடையும் நமசிவாயம்
கொண்டலும் நமசிவாயம்
வாடையும் நமசிவாயம்
தென்றலும் நமசிவாயம்

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

பரணி தீபமாய் தரணியில் ஒளிரும்
பரமேஸ்வரனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
ஹர ஹர என்றால் வரமழை
பொழியும் ஆதிலிங்கனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய

சித்தியும் நமசிவாயம்
புத்தியும் நமசிவாயம்
பக்தியும் நமசிவாயம்
சக்தியும் நமசிவாயம்

கார்த்திகைத் திருநாள் உற்சவம்
காணும் தீபச் சுடரே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய்
அருணாச்சலனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய

நிலவே நமசிவாயம்
நிஜமே நமசிவயம்
தலையே நமசிவாயம்
நினைவே நமசிவாயம்

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய-
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

சுற்றிட சுற்றிட வெற்றிகள்
வழங்கும் சோனாச்சலனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
பொற்சபை தன்னில் அற்புத நடனம்
புரியும் பரனே போற்றி!
ஹர ஓம் நமசிவாயம்

எங்கும் நமசிவாயம்
லீலையும் நமசிவாயம்
கங்கையும் நமசிவாயம்
கருணையும் நமசிவாயம்

சோனை நதிதீரம் கோவில் கொண்ட
அருணாச்சலனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
வானவெளிதனை கோபுரமாக்கி
மலையில் நிறைந்தாய் போற்றி!
ஹர ஓம் நமசிவாய

செல்வம் நமசிவாயம்
சீரும் நமசிவாயம்
வில்வம் நமசிவாயம்
வேஷம் நமசிவாயம்

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

ஆதிரை அழகா ஆவுடை மேலே
அமரும் தலைவா போற்றி!
சிவ ஓம் நமசிவாய
வேதியர் போற்றும் வெண்சடை இறைவா
வேதப் பொருளே போற்றி!
ஹர ஓம் நமசிவாய

முதலும் நமசிவாயம்
முடிவும் நமசிவாயம்
இடையும் நமசிவாயம்
விடையும் நமசிவாயம்

நாக முடியுடன் யோகம் புரியும்
நாகேஸ்வரனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
தேக நடுவிலே திருநீர் அணியும்
அருணேஸ்வரனே போற்றி!
ஹர ஓம் நமசிவாயம்

அம்மையும் நமசிவாயம்
அப்பனும் நமசிவாயம்
நன்மையையும் நமசிவாயம்
நாதனும் நமசிவாயம்

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

அடிமுடி இல்லா ஆனந்த வடிவே
அண்ணாமலையே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
அம்மை அப்பனாய் அகிலம் காக்கும்
அமுதேஸ்வரனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய

அதுவும் நமசிவாயம்
இதுவும் நமசிவாயம்
எதுவும் நமசிவாயம்
எதிலும் நமசிவாயம்

விடையாம் காளை வாகனமேறி
விண்ணில் வருவாய் போற்றி!
சிவ ஓம் நமசிவாய
வேண்டிய கணமே எண்ணிய கணமே
கண்ணில் தெரிவாய் போற்றி!
ஹர ஓம் நமசிவாய

சூலம் நமசிவாயம்
சுகமே நமசிவாயம்
ஈலம் நமசிவாயம்
வித்தியும் நமசிவாயம்

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

பௌர்ணமி நாளில் பிறைநிலவணியும்
மகாதேவனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
ஔஷத மலையாய் பிணிகள் தீர்க்கும்
அருணாச்சலனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய

தீபம் நமசிவாயம்
திருவருள் நமசிவாயம்
ரூபம் நமசிவாயம்
ருத்ரம் நமசிவாயம்

பனி கைலாயம் தீவடிவாகிய
அண்ணாமலையே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
தனி வடிவாகிய தென்னாடுடையாய்
திருவருளேசா போற்றி!
ஹர ஓம் நமசிவாயம்

எங்கும் நமசிவாயம்
எல்லாம் நமசிவாயம்
எழிலும் நமசிவாயம்
என்றும் நமசிவாயம்

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

விநாயகனே வினை தீர்ப்பவனே!


விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே


பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்