Thursday, 29 September 2011
சகலகலாவல்லி மாலை...!
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய் தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்கயாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைப் பாற்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுதுதார்ந்து உன் அருட் கடலில்
குளிக்கும் படிக்கென்று கூடும் கொலொ உளங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியும் சொற் சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாதம் பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராது என்னே நெடுந்தாட் கமலத்
தஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக்
கஞ்சத்தவி சொத்திருந்தாய் சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுதெளிது எய்த நல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
சொல்விற் பனமும் அவதான முங்கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்
செல்விக்கு அரிது என்றொரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகல கலாவல்லியே.
சொற்கும் பொருட்கும் உயிரா மெய்ஞ் ஞானத்தின் ஒற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பிலும் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.
குமரகுருபர சுவாமிகள்
Monday, 12 September 2011
நாத விந்து கலாதி நமோ நம...!
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோஹர
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூர
ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
ஆதி அந்தவுலாவாசு பாடிய
சேர்தல் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே
Thursday, 8 September 2011
சிவாஷ்டகம்...!
ப்ரபும் பிராண நாதம் விபும் விஷ்வநாதம்
ஜகன் நாத நாதம் சதானந்த பாஜம்
பவத் பவ்ய பூதேஷ்வரம் பூத நாதம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
கலே ருண்ட மாலம் தனு சர்ப்ப ஜாலம்
மகா கால காலம் கணேஷாதி பாலம்
ஜடா ஜூட கங்கோ தரங்கை விஷிஷ்யம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
முதா மாகரம் மண்டரம் மண்ட யந்தம்
மகா மண்டலம் பஸ்ம பூஷாதரம்தம்
மனாதிம் ஹ்யபாரம் மகா மோஹமாரம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
டடாதோ நிவாசம் மஹா அட்டகாசம்
மஹா பாப நாசம் சதா சுப்ர காஷம்
கிரீஷம் கணேஷம் சுரேஷம் மகேஷம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
கிரிந்தாத்ரா மஜா சங்க் ஹிதார்த்த தேகம்
க்ரௌ சம்ஸ்திதம் சர்வதா சன்னிகேஹம்
பரப்ரம்ஹா ப்ரம்மாதி வில்வந்த்ய மானம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
கபாலம் த்ரிஷுலம் கராபியாந்த தானம்
பதாம் போஜனம் ராய காமந்த தானம்
பலி வர்த்தயானம் சுராணாம் பிரதானம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
சரத் சந்திர காத்ரம் குணானந்த பாத்ரம்
த்ரிநேத்ரம் பவித்ரம் தனே ஷச்ய மித்ரம்
அபர்ணா களத்ரம் சரித்ரம் விசித்ரம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
ஹரம் சர்ப்ப ஹாரம் சிதா பூவிஹாரம்
பவம் வேத சாரம் சதா நிர்விகாரம்
ஸ்மஷாலே வசந்தம் மனோஜம்த ஹந்தம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
தவம்யத் ப்ரபாதே நர சூல பானே
படே ஸ்தோத்ர ரத்தம் விஹா ப்ராப்ய ரத்தம்
சபுத்ரம் சுஜானம் சுமித்ரம் களத்ரம்
விசித்ரை சமா ராத்யா மோக்ஷம் ப்ரயாதி
Wednesday, 7 September 2011
சித்தர்கள் பதினெண்மர் பாதம் போற்றி!
"நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்
நந்தியிடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார்கொங்கணவர் காலாங்கி
சிந்தியெழுகண்ணர் அகப்பேயர்பாம்பாட்டி
தேரையரும்குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ்சேர் சித்தர்பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னி சிரத்தணியாய் சேர்த்திவாழ்வா"
"ஓம் நமசிவாயா"
Tuesday, 6 September 2011
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி...!
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!
Saturday, 3 September 2011
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்...!
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானிலம் மீதினில் யார் இனி வருவார்
வீணையில் இன்னிசை தேனென தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
நடித்தான் தமிழை படைத்தான்
இசையை வடித்தான் தன்னை மறந்தனனே
முத்தமிழ் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
யாரபிமானம் மானம் கொள்வார்
யாரபிமானம் மானம் கொள்வார்
பெரும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
யாரபிமானம் மானம் கொள்வார்
வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தை கணத்தில் மறந்தனையே
யாரபிமானம் மானம் கொள்வார்
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
நாடகமா தர்பார் நாடகமா
அடக்குமுறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்
அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்
மோகன கானம் நான் மீட்டிடுவேன்
மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே
மோகன கானம் நான் மீட்டிடுவேன்
மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
Subscribe to:
Posts (Atom)
