1) பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆயுஷ்ய ஹோமம் செய்யக் கூடாது. சூரிய உதயத்தின் பின் தான் செய்ய வேண்டும்.
2)ஹோமத்திற்கு பயன்படுத்தும் சமித்துகளில் சீந்தில் தண்டு மிக முக்கியமானதாகும்.
3)ஒவ்வொரு வருட நிறைவில் ஜென்ம நட்சத்திர நாளில் செய்ய வேண்டும். நல்ல நாள் பார்க்க தேவை இல்லை.
4) ஹோமத்தை செய்பவர் திருமணமாகி குழந்தைப் பெற்ற பிராமணராக இருக்க வேண்டும்.
5) ஆண் குழந்தையானால் 11 வயதுக்குள்ளும் பெண் குழந்தையானால் பூப்படையும் வயது வரையும் மேற்கண்ட விதிகளை அனுசரித்து செய்ய வேண்டும்.
6) முதல் குழந்தைக்கு செய்யாமல் இரண்டாவது குழந்தைக்கு முதலில் ஆயுஷ்ய ஹோமம் செய்திருந்தால் முதல் குழந்தைக்கு 3வது விதியை அனுசரிக்காமல் ஆயுஷ்ய ஹோமம் செய்யலாம். முதல் குழந்தைக்கு சரியாக செய்திருந்தால் இரண்டாவது குழந்தைக்கும் 3வது விதியை முழுவதுமாக அனுசரித்தே செய்தாக வேண்டும். மற்ற விதிகளில் விலக்குகள் இல்லை.
