VIDEO
தேடுகின்ற நெஞ்சினிற்குள் ஓடி வந்து நிற்பவள்
நாடி வந்த அன்பருக்கு நன்மை யாவும் செய்பவள்
(தேடுகின்ற நெஞ்சினிற்குள்...)
ஓடி வந்து உட்கலந்து சோதியாகி
நின்றவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(ஓடி வந்து உட்கலந்து ...)
(ஆதி அந்தமாகி நின்ற ... கோரஸ்)
மூன்றெழுத்து மந்திரத்தை மூலமாகக் கொண்டவள்
மூன்று நாதர் அவர்க்கும் தானே தாயுமாக இருப்பவள்
(மூன்றெழுத்து மந்திரத்தை...)
மூவுலகை காத்து நிற்கும் சக்தியாகி நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(மூவுலகை காத்து நிற்கும்...)
(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)
கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்
கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்
அம்மா என் அம்மா அம்மா அம்மா
கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்
காமன் மந்திரம் தனை மத்தியிலே வைத்தவள்
(கலைமகளின் மந்திரத்தை...)
செளக்கியம் தரும் மந்திரத்தை இறுதியாகக் கொண்டவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(செளக்கியம் தரும் ...)
(ஆதி அந்த மாகி நின்ற...கோரஸ்)
அன்பு கொண்ட நெஞ்சம் தனை அரியணையாய் வைத்தவள்
ஆசை கொண்டு அழைத்த போது ஓடி வந்து நிற்பவள்
(அன்பு கொண்ட நெஞ்சம்...)
இச்சை கொண்டு வந்து சேர்ந்து இன்பமுறச் செய்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(இச்சை கொண்டு ...)
(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)
ஈசன் முதல் தேவர் போற்றும் கன்னி தெய்வமானவள்
உயிருமாகி உடலுமாகி உணர்வுமாக இருப்பவள்
ஊக்கம் தந்து சோர்வு நீக்கி வேகந்தனை தருபவள்
ஆதி அந்த மாகி நின்ற அன்னை பாலை தானவள்
(ஊக்கம் தந்து சோர்வு ...)
(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)
என்று அவளை பார்ப்போம் என ஏக்கமுறச் செய்பவள்
என்று அவளை பார்ப்போம் என
ஏக்கமுறச் செய்பவள்
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மம்மா
என்று அவளை பார்ப்போம் என ஏக்கமுறச் செய்பவள்
ஏக்கம் தனை தீர்ப்பது போல் எதிரில் வந்து நிற்பவள்
(என்று அவளை பார்ப்போம்...)
ஐயம் தொலைத்த மனதினுள்ளே ஐக்கியமாகி நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(ஐயம் தொலைத்த ...)
(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)
ஒடுங்குகின்ற மனதினுள்ளே ஒளிமயமாய் வருபவள்
ஓடும் மனதை தடுத்தி நிறுத்தி ஆனந்தத்தை தருபவள்
(ஒடுங்குகின்ற மனதினுள்ளே...)
ஓளடதமாய் பிறவிப் பிணியை தீர்த்து நம்மைக் காப்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)
கஞ்சமலரில் இருந்து நம்மை காமமுறச் செய்பவள்
கஞ்சமலரில் இருந்து நம்மை காமமுறச் செய்பவள்
தஞ்சம் என்று வந்தவரை தாங்கி நிற்கும் தாயவள்
கொஞ்சும் சலங்கை சலசலக்க ஓடி வந்து நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(கொஞ்சும் சலங்கை ...)
(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)
கவலை கொண்டு கதறும் போது கடுகி வந்து காப்பவள்
கருணை கண்கள் கொண்டு நம்மை விழி இமை போல காப்பவள்
(கவலை கொண்டு கதறும்...)
நெக்குறுகி அழைக்கும் போது சொக்கி வந்து நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(நெக்குறுகி அழைக்கும்...)
(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)
வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்
வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்
அம்மா என் அம்மா அம்மா அம்மா அம்மம்மம்மா
வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்
சதி ஒளித்து செருக்கறுத்து மதியை தெளிவு செய்பவள்
(வினையறுத்து பகைமுடித்து...)
குதித்து ஓடும் மனதை அடக்கி நிதியம் அருளைத் தருபவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(குதித்து ஓடும் மனதை...)
(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)
குஞ்சலங்கள் ஆட ஆட குதித்து குதித்து வருபவள்
குறைகள் தீர்த்து குலத்தைக் காத்து குதூகலத்தைத் தருபவள்
(குஞ்சலங்கள் ஆட ஆட...)
குணத்தை செம்மையாக்கி வைக்கும் குற்றமில்லா குரு அவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(குணத்தை செம்மையாக்கி...)
(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)
கொஞ்சிக் கொஞ்சிக் அழைக்கையிலே குழந்தையாக வருபவள்
வஞ்சனைகள் செய்பவரை வந்து நின்று ஒழிப்பவள்
(கொஞ்சிக் கொஞ்சிக்...)
தலை வணங்கி தாழ் பணிய வரமும் அருளும் தருபவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
(தலை வணங்கி தாழ்...)
(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)
(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
அன்னை பாலை தானவள்
அன்னை பாலை தானவள்