Sunday, 31 December 2023

குரு பார்க்க கோடி நன்மை...!


*குரு பார்க்க கோடி நன்மை...!*

ஜோதிட உலகில் இந்த வாக்கியம் மிகப் பிரசித்திபெற்ற ஒன்று. ஏன் அப்படின்னு தெரிந்து கொள்ள சின்னதாக ஒரு கதை.

நவக்கிரங்களில் முழுச் சுபர் தேவ குருவான பிரகஸ்பதி. குருவோட மகள் காதலிப்பாங்க.  குருவுக்கு இது தெரிய வரும் போது இந்த திருமணம் நடக்காது.  நடக்கவும் விடமாட்டேன்னு சொல்லுவார். ஏன்னு கேட்கும் போது களத்திர தோஷம் இருக்கு. திருமணம் ஆன முதல் நாள் இரவே கணவன் மரணம் அடைய நேரும். அதனால் திருமணம் கூடாதுன்னு சொல்லுவார்.

ஆனால் திருமணத்தில் விடாப்பிடியாக  காதலர்கள் இருப்பார்கள்.  குருவுக்கு இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். நாரதர் தான் இதுக்கு  ஒரு தீர்வை முன் வைப்பார்.  அம்பாள் சன்னதியில் விடியற்காலை வெள்ளி முளைக்கும் முன்பு திருமணத்தை நடத்தி விடியும் வரை சன்னதியில் இருந்தால் விடிந்ததும் தோஷம் விலகிடும்ன்னு சொல்லுவார் நாரதர்.

குருவும் அப்படியே செய்யலாம் என்று சொல்லுவார். ஆனால் அதில் ஒரு சிக்கல்ன்னு நாரதர் சொல்லுவார். நாரதர் இருந்தாலே கலகம் தானே. என்ன என்று  குரு கேட்கும் போது
திருமணம் ஆன தம்பதியர் ஒருவரை ஒருவர் தீண்டிடக்  கூடாது.  அதனால குருவான உமது பார்வையில் அவங்க இருவரும் இருக்க வேண்டும். நீர் பார்ப்பது அவங்களுக்கு தெரிய கூடாதுன்னு நாரதர் சொல்லுவார்.

நாரதர் சொன்னது போலவே திருமணமும் ஆகி,
தம்பதியர் அம்பாள் முன்பு அமர்ந்திருப்பாங்க. குரு மறைந்திருந்து அவர்களை பார்த்துக் கொண்டே இருப்பார். அந்த நேரம் பார்த்து ஒரு புலி சன்னதி உள்ளே  வந்திடும். புலியால் தம்பதியருக்கு எதுவும் ஆகிடக் கூடாதுல்ல. அதனால குரு தன்னோட தன்னோட பார்வையால புலியை பார்ப்பார். புலியும் தம்பதியரை ஒன்றும் செய்யாமல் கர்ப்ப கிரகத்தில் அமர்ந்துவிட்டு விடிந்ததும் போய்விடும். தோஷமும் கழிந்துவிடும்.

புலி சென்ற பின் நாரதர் வருவார். உங்களால தான் எல்லாம் நல்லவிதமாக நடந்ததாக குரு தன் நன்றியை தெரிவிப்பார். அதுக்கு நாரதர் உங்களுக்கும்  ஹனுமனுக்கும் சொந்த பலம் தெரியாது. உங்க பார்வை புலி மேல் பட்டதால் தான் கொடூரமான புலி கூட சாந்தமாகி எதுவும் செய்யாமல் போய்விட்டது. உங்கள்  பார்வைக்கு அவ்ளோ சக்தி உண்டு என்று சொல்லுவார். அதனால தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். 


Tuesday, 19 December 2023

மயூர பந்தம்...!


அதி நவீன நவநாகரீக உலகத்தில் வாழ்ந்து வந்தாலும்  பில்லி,சூனியம்,ஏவல் என்று பலதும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிச் செய்த மயூர பந்தம் பயன்படுத்தலாம். 


பாணலிங்கம்...!



கோள வடிவிலான வழவழப்பான தன்மை கொண்ட ஒரு கல். இது தானாக உருவாகக் கூடிய சுயம்பு லிங்கம்.  இந்தியாவில் நர்மதை ஆற்றங்கரையில் அதிகமாக காணக் கிடைக்கின்றது.

வைணவர்களுக்கு சாளக்கிராமம் எப்படி முக்கியமானதோ அப்படி சைவர்களுக்கு முக்கியமானது பாணலிங்கம். வீட்டில் வைத்தும் வழிபடலாம். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். 

சிவபெருமானை பல ரூபங்களில் வழிபடுகின்றோம். கற்களால் ஆன சிவலிங்கங்களை விட ஸ்படிக லிங்கம் உயர்வானதாகும். ஸ்படிக லிங்கத்தை விட உயர்வானது பாணலிங்கம். 
 

Saturday, 9 December 2023

நவக்கிரக தோஷங்கள் நீங்கிட...!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப ஏதோ ஒரு வகையில் நவக்கிரகங்களின் தோஷத்தினால் பாதிப்புக்கு உள்ளாகின்றோம். இதில் இருந்து விடுபட நமது ஞானிகளும் முனிவர்களும் சித்தர்பெருமக்களும் பல வழிமுறைகளை சொல்லிச் சென்றுள்ளனர். 

அவற்றில் பலதும் இக்காலத்தில் பின்பற்றிட நமக்கு மிகக் கடினமானத் தோன்றும். அருணகிரிநாதர் கந்தர் அந்தாதியில் ஒரு எளிய பாடலின் வழி நவக்கிரக தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார். 

கந்தர் அந்தாதியில் சேயவன் புந்தி எனத் தொடங்கும் 48 வது பாடல் தான் அது. இதைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கிறார் அருணகிரிநாதர். 


சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்

சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்

சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே 


நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சித்து பார்க்கலாம்.