Saturday, 9 December 2023

நவக்கிரக தோஷங்கள் நீங்கிட...!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப ஏதோ ஒரு வகையில் நவக்கிரகங்களின் தோஷத்தினால் பாதிப்புக்கு உள்ளாகின்றோம். இதில் இருந்து விடுபட நமது ஞானிகளும் முனிவர்களும் சித்தர்பெருமக்களும் பல வழிமுறைகளை சொல்லிச் சென்றுள்ளனர். 

அவற்றில் பலதும் இக்காலத்தில் பின்பற்றிட நமக்கு மிகக் கடினமானத் தோன்றும். அருணகிரிநாதர் கந்தர் அந்தாதியில் ஒரு எளிய பாடலின் வழி நவக்கிரக தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார். 

கந்தர் அந்தாதியில் சேயவன் புந்தி எனத் தொடங்கும் 48 வது பாடல் தான் அது. இதைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கிறார் அருணகிரிநாதர். 


சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்

சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்

சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே 


நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சித்து பார்க்கலாம். 

0 comments:

Post a Comment