Wednesday, 5 July 2023

சரஸ்வதி துதி...!


புத்தகத் துள்ளுறை மாதே
     பூவி லமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்
     வேதப் பொருளுக் கிறைவி
முத்தின் குடையுடை யாளே
     மூவுல குந்தொழு தேத்துஞ்
செப்புக் கவித்த முலையாய்
     செவ்வரி யோடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய்
     சரஸ்வதி யெனுந் திருவே
எக்கால முமுன்னைத் தொழவே
     னியலிசை நாடக மென்னும்
முத்தமிழ்க் கல்விக ளெல்லா
     முழுது மெனக்கருள் செய்தேன்
சித்தந் தன்னில்நீ யிருந்து
    திருவருள் செய்திடு வாயே.

0 comments:

Post a Comment