Thursday, 13 October 2011
போகரும் திருமாளிகைத் தேவரும்...!
ஒருநாள் போகரும் திருமாளிகைத் தேவரும் கோயிலிலிருந்து திரும்ப வெகு நேரமாகிவிட்டது. அவர்களுக்கு தீவட்டி பிடித்து வழி காட்டுகிற வேலையாள் உறங்கிவிட்டான். திருமாளிகைத் தேவர் தானே தீவட்டிப் பிடித்து போகருக்குப் பக்கமாய் சென்றார்.
தான் தங்கியிருந்த இடம் வந்துவிட, 'போதும் தீவட்டி இங்கயே இருக்கலாம்' என்று சொல்லி போகர் உள்ளே சென்று விட்டார். தீவட்டி பிடித்த நபரை அவர் திரும்பியும் பார்க்கவில்லை. குருவின் வார்த்தையைக் கட்டளையாக் கொண்டு திருமாளிகைத் தேவர் வாசலிலேயே நின்று விட்டார். ஒரு கையில் கோவில் பிரசாதம். மறு கையில் தீவட்டி. இரவு முழுவதும் கண்ணுறங்காது காலடி பிறழாது அங்கேயே நின்றார்.
பொழுது நன்றாக விடிந்தது. விழித்தெழுந்த போகர் திருமாளிகைத் தேவரை காணாமல் வெளியே வந்தார். சீடர் வாசலிலேயே நின்றிருந்தார். நடந்தவற்றைத் தனது ஞானசக்தியில் தெரிந்து கொண்ட போகர், சீடரின் குருபக்தி கண்டு மகிழ்ந்தார். அவரை ஆசிர்வதித்தார். குண்டலினி உனது வசமாகட்டும் என்று கூறி யாத்திரை புறப்பட்டுச் சென்றார்.
அன்று முதல் குருவருளால் நினைத்த மாத்திரத்தில் குண்டலினியை எழுப்பும் சக்தியை திருமாளிகைத் தேவர் அடைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
அருமை!
Post a Comment