Saturday, 15 October 2011

திருமாளிகைத்தேவரும் பூஜையும்!



திருமாளிகைத்தேவர் வழக்கம் போல ஆற்றில் நீராடிவிட்டு பூக்கூடையில் பூக்களும் குடத்தில் அபிஷேகத்திற்கான நீரும் எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கிப் புறப்பட்டார். சிறிது தூரம் தான் சென்றிருப்பார். எதிரே ஒரு சவ ஊர்வலம்.

பிணத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அதே வழியில் கோயிலுக்கு செல்ல முடியுமா? அவர் மீண்டும் குளித்துவிட்டு சென்றால் சாந்தி செய்தது போலாகும். ஆனால் பூஜைக்குரிய காலம் கடந்துவிடுமே என்று கவலையாகி விட்டது சித்தருக்கு. பக்கத்தில் விநாயகர் கோயில் இருந்தது. பிள்ளையாரப்பா இப்போது நீ தான் ஒரு வழி பண்ணனும் என்று வேண்டிக்கொண்டார்.

பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. பாடையில் சவாமாய் கிடந்தவன் உயிர் பெற்று எழுந்தான்.

சரி ஒருநாள் பிள்ளையார் காப்பாற்றி விட்டார். இதே போன்ற இக்கட்டுகள் அடிக்கடி வந்தால் என்ன செய்வது என்று யோசித்தார் திருமாளிகைத்தேவர். யோசனை பிறந்தது. நடைமுறைப் படுத்தலானார்.

ஆற்றில் நீராடி அனுஷ்டானங்கள் முடித்ததுமே பூக்கூடையையும் நீர்க் குடத்தையும் ஆகாயத்தை நோக்கி வீசிவிட்டு கோயிலுக்கு நடப்பார். மேலே பூக்கூடையும் நீர்க்குடமும் ஆகாய மார்க்கமாக அவர் கூடவே தொடர்ந்து வரும். கோயில் வாசலுக்கு வந்ததும் அவை அவருடைய கைக்கு வந்து சேரும். அவர் பூஜையை நிமதியாக செய்து முடிப்பார்.

0 comments:

Post a Comment