Thursday, 13 October 2011

இடைக்காடரின் வானியல் அறிவு...!



இடைக்காடர் மருத்துவ யோக முறைகளில் போலவே சோதிடத்திலும் வானியலிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

ஒரு சமயம் பெரும் பஞ்சம் வரப்போவதை அவர் முன்கூட்டியே அறிந்தார். ஊர் மக்களுக்கு சொல்லவும் செய்தார். அவர்கள் அவர் சொல்லை அலட்சியம் பண்ணினார்கள்.  அதனால் அவர்கள் பஞ்சம் வந்த போது பட்டினியால் வாடும்படி நேரிட்டது. அவர்களுடைய கால்நடைகள் மேய்ச்சலின்றி உயிர் விட்டன.

ஆனால், இடைக்காடரின் ஆடுகள் சாகவில்லை.அவர் முன்கூட்டியே தமது ஆடுகளுக்கு எருக்கிலை திண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். எந்த வறட்சிக் காலங்களிலும் எருக்கஞ்செடிகள் மண்டிக்கிடக்கவே செய்யும்.

இடைக்காடர் பஞ்சம் பற்றிய முன்னெச்சரிக்கையுடன் வீடு கட்டும் போது குருவரகு என்னும் தானியத்தை களிமண்ணோடுகலந்து தான் கட்டி இருந்தார். எருக்கிலை தின்ற ஆடுகள் உடலில் அரிப்பு உண்டாகி  அரிப்பைப் போக்கிக் கொள்ள வீட்டுச் சுவர்களில் உராய்ந்துகொண்டன. அப்போது களிமண்ணோடு கலந்திருந்த தானியங்கள் உதிர்ந்தன. அவற்றை சமைத்துண்டு உயிர்பிழைத்தார் இடைக்காட்டுச் சித்தர்.

0 comments:

Post a Comment