Tuesday, 12 August 2025
கோவிலுக்கு குழந்தையை தத்துக் கொடுப்பது எப்படி...!
கோவிலுக்கு குழந்தைகளை தத்துக் கொடுக்கும் வழக்கம் முன்பு போல பெரிய அளவில் இல்லை என்றாலும் இன்றும் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இதற்கென்று பிரத்தியேகமான சில நடைமுறைகள் உண்டு. அதற்கு முன் ஏன் தத்துக் கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
குழந்தையின் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் குழந்தைக்கு கண்டம்/சரி செய்ய இயலாத அளவிலான உடல் நலக் கோளாறுகள்/பெற்றோருக்கு குழந்தையினால் பாரிய அளவிலான பாதிப்புகள் வரும் என ஜோதிடர் கணிக்கும் பட்சத்தில் குழந்தையை தத்துக் கொடுக்க பரிந்துரை செய்வார்.
குலதெய்வக் கோவிலுகோ அல்லது இஷ்ட தெய்வக் கோவிலுக்கோ குழந்தையை தத்துக் கொடுக்கலாம். உக்கிர தெய்வமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.
குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் தான் தத்துக் கொடுக்க வேண்டும். ஒரு செப்புத் தாம்பாளம்/ஒரு தென்னங்கன்று/குழந்தையின் இரு கைகளும் கொள்ளும் அளவிற்கான சில்லறைக் காசுகள் மூன்று மடங்கு இவற்றோடு குழந்தையையும் தூக்கிக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். ஐயர் உள்ள கோவிலாக பார்த்துச் செல்வது சிறப்பானதாகும்.
காலையில் 11 மணிக்கு முன்பாக சென்று குழந்தையை தத்துக் கொடுத்து விட்டு பெற்றோர்கள் குழந்தையை திரும்பிப் பார்க்காமல் கோவில் எல்லையை தாண்டியோ அல்லது குழந்தை கண்ணில் படாதவாறு சற்று தூரமாகவோ சென்று விட வேண்டும். பிறகு உறவு முறை இல்லாத தம்பதியர் சென்று அந்தக் குழந்தையை தான் வளர்ப்பதாக கூறி கோவிலுக்கு காசு கொடுத்துவிட்டு வாங்கிக் கொண்டு வரவேண்டும். அப்படி குழந்தையை வாங்கி வந்தபிறகு குழந்தை அணிந்திருக்கும் உடுப்பை பிறர் பயன்படுத்த முடியாதவாறு கிழித்து எறிந்துவிட்டு புது உடுப்பை உடுத்த வேண்டும். இந்த புது உடுப்பை தத்து வாங்கிய தம்பதியரே கோவிலுக்கு வரும் போது தங்கள் செலவில் வாங்கி வரவேண்டும்.
கோவில் எல்லை தாண்டி வந்து குழந்தையை பெற்றொரிடம் ஒப்படைத்து விடவேண்டும். தத்து வாங்கியவரோ பெற்றோரோ அதன் பிறகு அந்தக் குழந்தையின் மீது எந்த உரிமையும் கோரக் கூடாது. அந்த குழந்தைக்கு அதன் பிறகு முக்கியான எந்த விஷயமாக இருந்தாலும் கோவிலில் உத்தரவு வாங்கியே செய்து வரவேண்டும்.
Sunday, 11 May 2025
ஆயுஷ்ய ஹோமம்...!
Wednesday, 3 January 2024
அஷ்டகவர்க்கம்...!
ஜோதிடத்தில் பலன் எடுக்க பலவிதமான முறைகள் உண்டு. அதில் ஒன்று அஷ்டகவர்க்கம். இந்த முறையில் ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைய அறிய முடியும். இந்த முறையில் ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கும் தான் நின்ற இடத்திற்குமான பங்களிப்பினை வழங்கும். இந்த பங்களிப்பானது பரல்கள் என்று குறிப்பிடப்படுகின்ற்து.
அஷ்டகவர்க்க முறையில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவிற்கு இடமில்லை. சூரியன் முதலாக சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு மட்டுமே அஷ்டகவர்க்க அட்டவணைகள் உண்டு. ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற இடத்தில் 4 பரல்களுக்கு மேல் பெற்றிருந்தால் நல்ல பலனைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். 3 அல்லது அதற்கு கீழான பரல்கள் பெற்றிருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.
அஷ்டகவர்க்க கணிதம் சற்றே சிக்கலானது. இந்தப் பதிவானது அதை விவரிப்பதற்கானதும் அல்ல. சனி என்றாலே எல்லோருக்கும் சற்று பயம் என்று பார்த்தோம் அல்லவா? அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு. அஷ்டகவர்க்கத்தில் மொத்தம் 8 அட்டவணைகள் உண்டு. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அட்டவணை வீதம் 7 அட்டவணையும் இந்த 7 அட்டவணையையும் மொத்தமாக கூட்டி சர்வாஷ்டக வர்க்கம் என்ற அட்டவணையும் உண்டு.
இதில் சனியின் அட்டவணை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் சஞ்சாரம் செய்யும். இந்த காலத்தில் சனி தரும் பலன்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சனியின் அஷ்டகவர்க்கம் மூலமாக நாம் அறிய முடியும்.
சனி உங்களின் ஜனன ஜாதகத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தற்சமயம் கோட்சாரத்தில் சனி எந்த ராசியில் இருக்கிறது என்று பாருங்கள். கும்ப ராசியில் சனி. உங்கள் ஜாதகத்தின் அடிப்படையிலான சனியின் அஷ்டகவர்க்கத்தில் கும்ப ராசியில் சனி எத்தனை பரல்கள் வாங்கி இருக்கின்றது என்று பாருங்கள். 4 அல்லது அதற்கு மேலான பரல்கள் என்றால் கும்பராசியில் சனி இருக்கப் போகும் 2 1/2 ஆண்டு காலமும் சனியால் பெரிய அளவிலான பிரச்சினைகள் இருக்காது.
கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள். முதல் படம் அஷ்டகவர்க்கத்தின் 8 அட்டவணைகளும் அடங்கியது. இரண்டாவது படம் சனியின் அஷ்டகவர்க்கம். அதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள கும்பராசியில் சனி 2 பரல்கள் மட்டுமே பெற்றிருக்கின்றது. இந்த ஜாதகர் கும்பராசியில் சனி இருக்கும் காலங்களில் அதிகம் சிரமப்பட நேரிடும். இதில் சிம்மம் மற்றும் விருச்சிகத்தில் சனி ஒரு பரல் மட்டுமே பெற்றுள்ளது. அந்த ராசிகளில் கோட்சார சனி வரும் போது அதிக கஷ்டங்களை அனுபவிக்க நேரும்.
Tuesday, 2 January 2024
சனிப் பெயர்ச்சி...!
சனிப் பெயர்ச்சி என்றாலே மக்களிடம் ஒரு அதீத பயம் தொற்றிக் கொள்கின்றது. மற்ற கிரகங்களின் பெயர்ச்சி பற்றியோ அல்லது நடப்பு தசாபுத்திகள் பற்றியோ அதிகம் கவலைப் படாதவர்கள் கூட சனிப் பெயர்ச்சி என்றால் கலக்கம் அடைகின்றார்கள்.
சனிப் பெயர்ச்சிக்கு இவ்வளவு பயம்/கலக்கம் தேவையா என்றால் தேவை இல்லை என்பதே உண்மை. ஆனால் சனி பாரபட்சம் பார்க்காமல் பலாபலன்களை வழங்குபவர். நீதி/நேர்மை/ஒழுங்கு/கடமை தவறாமை/வஞ்சகம்/சூழ்ச்சி/களவு போன்ற தேவையற்ற குணநலன்கள்/பண்புகள் போன்றவை இல்லாமல் வாழ்ந்தாலே சனி பாதிப்பை தருவதில்லை.
சரி எல்லாவித நற்பண்புகளோடு நல்ல மனிதராக வாழ்ந்தாலும் சனியின் பாதிப்புகள் இருக்க தானே செய்கின்றது என்று கேட்க தோன்றலாம். முற்பிறவிகளில் நாம் செய்த பாவச்செயல்களின் விளைவை குறிப்பவர் சனி. ஜனன ஜாதகத்தில் சனியின் ஆதிபத்தியம்/சனி அமர்ந்திருக்கும் இடம்/சனியோடு தொடர்பு கொள்ளும் கிரகங்கள்/சனியின் நட்சத்திரங்களான பூசம்,அனுஷம்,உத்திரட்டாதியில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்/சனியின் பார்வை படும் இடங்கள் மூலமாக மட்டுமே இதை அறிய முடியும்.
பொதுவாக சனி உபஜெய ஸ்தானங்களான 3,6,10,11 ம் இடங்களில் ஜனன ஜாதகத்தில் இருந்தாலோ அல்லது கோட்சாரத்தில் மேற்கண்ட இடங்களுக்கு பெயர்ச்சி ஆனாலோ பெரிதாக பாதிப்பை தருவதில்லை.
2023 டிசம்பரில் நடந்த சனிப் பெயர்ச்சியை பொறுத்த வரையில் தனுசு,கன்னி,ரிஷபம்,மேஷம் போன்ற நான்கு ராசிகளுக்கு மட்டுமே உபஜெய ஸ்தானத்தில் அடுத்த பெயர்ச்சி வரும் வரையில் சனி இருப்பார்.
சனி உங்கள் ஜாதகத்தில் எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். சனி தரும் பாதிப்பில் இருந்து விடுபட எளிதான பரிகாரங்களை பார்க்கலாம். சனி பொதுவாக வயதானவர்கள்/மாற்றுத் திறனாளிகள்/பிச்சைக்காரர்கள்/வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்கள் போன்றோரை குறிக்கும் கிரகம் ஆகும். மேற்கண்டவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை இயன்ற போதெல்லாம் செய்து வந்தாலே சனி தரும் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். அதைவிட்டு விட்டு கோவில் கோவிலாக பரிகாரம் என்ற பெயரில் பொருட்செலவு செய்வதால் பயனில்லை.
சனி கவசத்தை பாராயணம் செய்யலாம். அதற்கும் நேரம் காலம் உண்டு. சனிக்கிழமை தோறும் சனி ஹோரையில் பாராயணம் செய்ய வேண்டும். இதற்கு வாரம் பத்து நிமிடம் ஒதுக்கினாலே போதுமானது.
சனி கவசத்திற்கான இணைப்பு:
Monday, 1 January 2024
காரணமில்லாமல் காரியமில்லை..!
இராமாவதாரம் முடிந்து இராமன் வைகுண்டவாசம் புறப்பட்ட நிலையில் தன்னுடன் வருமாறு அனுமனையும் அழைத்தார். அழைப்பினை அனுமன் மறுத்து அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
உங்களை இராமபிரானாகவே இதுவரையில் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். வைகுண்டம் சென்றால் உங்களை விஷ்ணுவாகத் தான் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் சீதா தேவியோடு பார்த்த உங்களை திருமகளோடு பார்க்க என் மனம் ஒப்பாது. மேலும் நான் வைகுண்டம் வரவேண்டும் என்றால் இந்த உடலையும் துறந்தாக வேண்டும். அது என்னால் இயலவே இயலாது.
ஆதிசேஷன் இராமாவதாரத்தில் லஷ்மணனாக அவதரித்து இராமனுக்கு சேவை செய்தார். லஷ்மணனையே தனக்கு அண்ணனாக பலராமராக கிருஷ்ண அவதாரத்தில் பிறக்க வைத்து அவருக்கு பாதசேவை செய்தார் கிருஷ்ணர். அது போன்றே தனக்கு தாசனான அனுமனை தன் கொடியின் சின்னமாக பிம்ப ஆவாஹனம் செய்து தன் தலைக்கு மேலே உயர்த்தி வைத்தார். கிருஷ்ணரின் தேரில் இருக்கும் கொடியின் சின்னத்தில் அனுமன் இருப்பார்.
மகாபாரதப் போரின் இறுதியில் தேரில் இருந்து அர்ஜூனனையே முதலில் இறங்கச் சொல்வார் கிருஷ்ணர். ஆனால் முறைப்படி தேர்ப்பாகனே முதலில் இறங்க வேண்டும். இதில் அர்ஜூனனுக்கு மனவருத்தம் இருந்தாலும் கிருஷ்ணர் பேச்சை மீற இயலாத நிலையில் அர்ஜூனன் முதலில் இறங்குவான். அதன் பிறகே கிருஷ்ணர் இறங்குவார். கிருஷ்ணர் இறங்கிய மறுகணமே தேரின் கொடியில் இருந்த அனுமன் கொடியை விட்டு மறைந்து விடுவார். தேரும் சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும். அனுமன் தான் அரணாக காத்து நின்றார் என்றும் கிருஷ்ணர் ஏன் தன்னை முதலில் இறங்கச் சொன்னார் என்பதையும் அர்ஜூனன் புரிந்து கொள்வான். மீண்டும் தலைப்பை படியுங்கள்.
காரணமில்லாமல் காரியமில்லை.
Sunday, 31 December 2023
குரு பார்க்க கோடி நன்மை...!
ஜோதிட உலகில் இந்த வாக்கியம் மிகப் பிரசித்திபெற்ற ஒன்று. ஏன் அப்படின்னு தெரிந்து கொள்ள சின்னதாக ஒரு கதை.
நவக்கிரங்களில் முழுச் சுபர் தேவ குருவான பிரகஸ்பதி. குருவோட மகள் காதலிப்பாங்க. குருவுக்கு இது தெரிய வரும் போது இந்த திருமணம் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன்னு சொல்லுவார். ஏன்னு கேட்கும் போது களத்திர தோஷம் இருக்கு. திருமணம் ஆன முதல் நாள் இரவே கணவன் மரணம் அடைய நேரும். அதனால் திருமணம் கூடாதுன்னு சொல்லுவார்.
ஆனால் திருமணத்தில் விடாப்பிடியாக காதலர்கள் இருப்பார்கள். குருவுக்கு இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். நாரதர் தான் இதுக்கு ஒரு தீர்வை முன் வைப்பார். அம்பாள் சன்னதியில் விடியற்காலை வெள்ளி முளைக்கும் முன்பு திருமணத்தை நடத்தி விடியும் வரை சன்னதியில் இருந்தால் விடிந்ததும் தோஷம் விலகிடும்ன்னு சொல்லுவார் நாரதர்.
குருவும் அப்படியே செய்யலாம் என்று சொல்லுவார். ஆனால் அதில் ஒரு சிக்கல்ன்னு நாரதர் சொல்லுவார். நாரதர் இருந்தாலே கலகம் தானே. என்ன என்று குரு கேட்கும் போது
திருமணம் ஆன தம்பதியர் ஒருவரை ஒருவர் தீண்டிடக் கூடாது. அதனால குருவான உமது பார்வையில் அவங்க இருவரும் இருக்க வேண்டும். நீர் பார்ப்பது அவங்களுக்கு தெரிய கூடாதுன்னு நாரதர் சொல்லுவார்.
நாரதர் சொன்னது போலவே திருமணமும் ஆகி,
தம்பதியர் அம்பாள் முன்பு அமர்ந்திருப்பாங்க. குரு மறைந்திருந்து அவர்களை பார்த்துக் கொண்டே இருப்பார். அந்த நேரம் பார்த்து ஒரு புலி சன்னதி உள்ளே வந்திடும். புலியால் தம்பதியருக்கு எதுவும் ஆகிடக் கூடாதுல்ல. அதனால குரு தன்னோட தன்னோட பார்வையால புலியை பார்ப்பார். புலியும் தம்பதியரை ஒன்றும் செய்யாமல் கர்ப்ப கிரகத்தில் அமர்ந்துவிட்டு விடிந்ததும் போய்விடும். தோஷமும் கழிந்துவிடும்.
புலி சென்ற பின் நாரதர் வருவார். உங்களால தான் எல்லாம் நல்லவிதமாக நடந்ததாக குரு தன் நன்றியை தெரிவிப்பார். அதுக்கு நாரதர் உங்களுக்கும் ஹனுமனுக்கும் சொந்த பலம் தெரியாது. உங்க பார்வை புலி மேல் பட்டதால் தான் கொடூரமான புலி கூட சாந்தமாகி எதுவும் செய்யாமல் போய்விட்டது. உங்கள் பார்வைக்கு அவ்ளோ சக்தி உண்டு என்று சொல்லுவார். அதனால தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள்.
Tuesday, 19 December 2023
மயூர பந்தம்...!
பாணலிங்கம்...!
கோள வடிவிலான வழவழப்பான தன்மை கொண்ட ஒரு கல். இது தானாக உருவாகக் கூடிய சுயம்பு லிங்கம். இந்தியாவில் நர்மதை ஆற்றங்கரையில் அதிகமாக காணக் கிடைக்கின்றது.
வைணவர்களுக்கு சாளக்கிராமம் எப்படி முக்கியமானதோ அப்படி சைவர்களுக்கு முக்கியமானது பாணலிங்கம். வீட்டில் வைத்தும் வழிபடலாம். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
சிவபெருமானை பல ரூபங்களில் வழிபடுகின்றோம். கற்களால் ஆன சிவலிங்கங்களை விட ஸ்படிக லிங்கம் உயர்வானதாகும். ஸ்படிக லிங்கத்தை விட உயர்வானது பாணலிங்கம்.
Saturday, 9 December 2023
நவக்கிரக தோஷங்கள் நீங்கிட...!
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே
Wednesday, 5 July 2023
சரஸ்வதி துதி...!
Sunday, 2 July 2023
சனி கவசம்...!
Saturday, 1 July 2023
காலசர்ப்ப தோஷம்...!
Sunday, 2 October 2022
விபத்துகளில் இருந்து தற்காத்திட...!
Wednesday, 18 August 2021
சகல செல்வத்தையும் பெற்றிட...!
Tuesday, 17 August 2021
ஆவணி மூலம்...!
Tuesday, 28 November 2017
எண் கணிதம்...!
பிறப்பு எண் - பிறந்த திகதியை மட்டும்
கூட்டி வரும் எண்.
கூட்டு எண் - பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கூட்டி வரும் எண்.
பெயர் எண் - பெயரிலுள்ள எழுத்துக்களுக்கான எண்களை கூட்டி வரும் எண்.
இனி ஒரு உதாரணம் வழியாக கீழுள்ள அட்டவணைகள் கொண்டு பெயர் எண் கணக்கிடும் முறையை காண்போம். ஒரு குழந்தை 9/11/2017 பிறந்ததாக எடுத்துக் கொள்வோம்.
பிறப்பு எண் 9
கூட்டு எண் 3
பிறப்பு எண்ணுக்கும் கூட்டு எண்ணுக்கும் பொருந்தும் எண் மட்டுமே பெயர் எண்ணாக வரவேண்டும். அப்படி அட்டவணையை பார்க்கும் போது 9 க்கு 3 என்றால் பெயர் எண் 9 என்பதே சரி.
பெயர் எண் 9 என்று வரும் போது 9,18,27,36,45,54,63,72,81 ஆகிய கூட்டுக் தொகை வரும் பெயர்களை சூட்டலாம். இது பொதுவாக சரி தான் என்றாலும் இதில் குறிப்பிட்டு இருக்கும் எண்கள் எல்லாம் சிறந்ததா என்றால் இல்லை என்பதே சரி.
பெயர் எண் 9 க்கு 45 மட்டுமே ஆகச் சிறந்தது. 45 அமையாத பட்சத்தில் 27 சிறந்தது.
Friday, 28 July 2017
அன்னை ஸ்ரீபால திரிபுரசுந்தரி துதி...!
Tuesday, 6 December 2011
தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்,பசியினால் இளைத்தே
வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்..."
என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு போனாலும் மனிதனது மனம் வறண்டு போய்விடக்கூடாது என்பது அவரது எண்ணம்.
இராமலிங்க அடிகளாரின் பாடல்களில் தாயுமானவர், திருமூலர் போன்றோரின் சாயல் தென்படும். நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரே இவருடைய மானசீக குரு. இராமலிங்கருக்கு இரவில் பாட்டெழுதுவது மிகவும் பிடித்தமான செயல். அருகே ஒரு எண்ணெய் விளக்கு வைத்துக் கொண்டு எழுதுவார்.
இப்படி எழுதும் போது ஒரு நாள் விளக்கிலே எண்ணெய் தீர்ந்து போய்விட்டது. எண்ணெய்ப் பாத்திரம் என்று நினைத்து பக்கத்தில் உள்ள தண்ணீர் பாத்திரத்திலிருந்து நீர் ஊற்றினார். விளக்கு அணையவில்லை. தொடர்ந்து எரிந்தது.
இதனை அவர் சீடர்களில் ஒருவரான தொழுதூர் வேலாயுதம் கண்டு வியந்தார். பின்னர்..
தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
எங்கள் இராமலிங்கர் நல்ல அருட்பா முறையைத்
துங்கமுற மாணா தொழு.
இவ்வாறு தனது குருநாதரை போற்றி பாடினார்.
Saturday, 3 December 2011
சக்தி இல்லையேல் சிவனில்லை!
ஆனால் சக்தி சமாதானம் அடையாமல் நாம் இருவரும் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்போம் அப்போது என்ன செய்கிறான் பார்ப்போம் என்று சொல்ல சிவனும் அதற்கு சம்மதித்தார். எப்போதும் போல சிவனை வழிபட வந்த பிருங்கி முனிவர் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்பதை பார்த்து ஒரு வண்டாக உருமாறி சிவனின் பாகத்தை மட்டும் சுற்றி வந்து வழிபாட்டு விட்டு பிறகு தன்னுடைய உருவத்திற்கு மாறி செல்ல முற்பட்டார்.
இதைக்கண்டு கடுங்கோபம் கொண்ட சக்தி, பிருங்கி முனிவரை தடுத்து என்னுடைய சக்தி இருப்பதால் தானே சிவனை சுற்றி வருகிறாய் என்று சொல்லி அவரிடமிருந்த சக்தி முழுவதையும் பறித்து விட்டாள். சக்தியை இழந்த பிருங்கி முனிவரின் உடம்பில் இருந்த சதைகள் எல்லாம் அற்று விழ வெறும் எலும்புக்கூடோடு ஜீவனை மட்டும் விடாது இருந்தார். சக்தி போனதால் அவரிடமிருந்த அஷ்டமா சித்துக்களும் போய்விட்டன. ஜீவனும் போகும் தருவாயில் சிவன் தன் தண்டத்தை எலும்புக்கூட்டிடம் கொடுத்து காப்பாற்றி, சக்தியிடம் அவர் உடம்பை தருமாறு கூறினார்.
சக்தியும் சிவன் கூறியபடியே பிருங்கி முனிவரிடம் பறித்த சக்திகளை எல்லாம் திருப்பி கொடுத்தாள். பிருங்கி முனிவரும் தன் தவறை உணர்ந்து அன்னையிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவனும் பராசக்தியும் மனம் குளிர்ந்து பிருங்கி முனிவரை வாழ்த்தினர்.
Friday, 4 November 2011
திருநீறு குழந்தையான கதை...!
மச்சேந்திரர் அவள் மீது இரக்கம் கொண்டு சிறிது திருநீற்றை அளித்தார். இதனை நீ உட்கொண்டால் மக்கட்பேற்றை அடைவாய் என்று வாழ்த்திச் சென்றார்.
திருநீறு பெற்றவள் அதனை உட்கொள்ளாமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் தெரிவித்தாள். பக்கத்து வீட்டுக்காரியோ உனக்கு திருநீறு கொடுத்தவர் போலித்துறவியா கூட இருக்கலாம். உன்னை மயக்கி அடைவதற்காக கூட இத்திருநீற்றை கொடுத்து இருக்கலாம் என்று கூறினாள். ஆகவே நீ திருநீற்றை உட்கொள்ளாதே என்றாள்.
இதனால் அச்சம் அடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் போட்டுவிட்டாள்.
சில ஆண்டுகள் கழித்து மச்சேந்திரர் மறுபடியும் அந்த ஊருக்கு வந்தார். தான் முன்பு பிள்ளைப்பேற்றிற்காக திருநீறு அளித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று,அம்மணி உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும் அவனை அழைப்பாயாக என்றார்.
பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு திருநீற்றை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்போது குழந்தை இல்லாமல் வருந்தும் நிலையைக் கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்.
அவளது நிலையைக் கண்டு மனம் இரங்கிய மச்சேந்திரர், சரி அந்த திருநீற்றை எங்கு கொட்டினாய் என்றார். அவளும் அடுப்பு சாம்பலை வழக்கமாக கொட்டும் இடத்தில் தான் அந்த திருநீறு இருந்த சாம்பலையும் கொட்டியதாக சொல்லி, அச்சாம்பல் கொட்டப்பட்டு இருந்த குப்பை மேட்டை காட்டினாள்.
மச்சேந்திரர் குப்பைப்பட்டரையிடம் சென்று கோரக்கா என்று கூப்பிட்டார். குப்பைப் பட்டறையில் இருந்து ஏன் என்னும் ஒலி கேட்டது.
மச்சேந்திரர் அங்கிருந்தவர்களிடம் குப்பையை அகற்றுமாறு கூறினார். அதிலிருந்து குழந்தை ஒன்று, மச்சேந்திரர் திருநீறு கொடுத்த காலத்திலிருந்து இருக்க வேண்டிய வளர்ச்சியோடு வெளியில் வந்தது.
மச்சேந்திரர் அக்குழந்தையை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையோ பெண்மணியிடம் இருக்கப் பிடிக்காமல் மச்சேந்திரரை பின் தொடர்ந்து சென்று பெரிய சித்தர் ஆகி குருவை மிஞ்சிய சீடர் ஆனார்.
